பழுதான மோட்டாரை சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர், கொடுவாய் பகுதியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா பள்ளியின் தாளாளர் ஆவார். இவரது வீட்டில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும், திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்த மணியாள் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நீர் இறைக்கும் மின் மோட்டார் பழுதான காரணத்தால் சதீஷ்குமார் அதை சரி செய்ய முயன்றார்.



அப்போது, எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதையறிந்து, அவரைக் காப்பாற்ற முயன்ற மணியாளையும் மின்சாரம் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் மத்திய போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...