நீலகிரி: நிதி நெருக்கடியால் தவித்து வரும் நீலகிரி மாவட்டத்திற்குற்பட்ட நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம், சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி: நிதி நெருக்கடியால் தவித்து வரும் நீலகிரி மாவட்டத்திற்குற்பட்ட நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம், சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி வருவாய் இல்லாமல் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. பேரூராட்சிக்கு வரும் சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி வருவாயில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளமே வழங்க முடியாமல் நிர்வாகம் தவித்து வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்துக்கு வருவாயைப் பெருக்க அங்குள்ள சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பேரூராட்சி வருவாயைப் பெருக்க பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.

பேரூராட்சி அதிகாரிகள் கூறும் போது:- பேரூராட்சிக்கு நிதி ஆதாரங்கள் ஏதுமில்லை. தற்போது. பேருந்து நிலையத்தில் ரூ. 3 கோடி செலவில் புதுப்பித்து கடைகள் அமைக்கத் திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும், என்றனர்.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி வருவாய் இல்லாமல் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. பேரூராட்சிக்கு வரும் சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி வருவாயில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளமே வழங்க முடியாமல் நிர்வாகம் தவித்து வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்துக்கு வருவாயைப் பெருக்க அங்குள்ள சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பேரூராட்சி வருவாயைப் பெருக்க பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.

பேரூராட்சி அதிகாரிகள் கூறும் போது:- பேரூராட்சிக்கு நிதி ஆதாரங்கள் ஏதுமில்லை. தற்போது. பேருந்து நிலையத்தில் ரூ. 3 கோடி செலவில் புதுப்பித்து கடைகள் அமைக்கத் திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும், என்றனர்.
