கோவை: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வங்கிகள் சீர்திருத்தத்தை அனுமதிக்கக் கூடாது, தனியார் வங்கிகளை தேசிய மயமாக்க வேண்டும், போதிய அளவு வங்கிகளில் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வங்கி கூட்டமைப்பினர் சார்பில் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமை அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாரக் கடன்களை வசூலிக்க வேண்டும், ஊதிய உயர்வு தொடர்பாக காலம் தாழ்த்தாமல் சங்க ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.