நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் நடக்கும் ரோஜா கண்காட்சி வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் நடக்கும் ரோஜா கண்காட்சி வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் ரோஜா கண்காட்சியை சிறப்பாக நடத்த தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். உலக ரோஜா சம்மேளனத்தினால் சிறந்த ரோஜா பூங்காவாக அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பூங்காவில் சுமார் 4,000 வகையான ரோஜாக்கள் சுமார் 40 ஆயிரத்திற்கு மேலான செடிகளில் பூத்து குலுங்குகிறது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் ரோஜா கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலிருந்து பல வண்ண ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு வடிவமைப்புகளில் காட்சிப் படுத்தப்படவுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த ரோஜா பூங்காவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ரூ. 46 லட்சம் மதிப்பில் காட்சி அறையும் அமைக்கப்பட்டு வருவது இப்பூங்காவிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.


உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் ரோஜா கண்காட்சியை சிறப்பாக நடத்த தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். உலக ரோஜா சம்மேளனத்தினால் சிறந்த ரோஜா பூங்காவாக அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பூங்காவில் சுமார் 4,000 வகையான ரோஜாக்கள் சுமார் 40 ஆயிரத்திற்கு மேலான செடிகளில் பூத்து குலுங்குகிறது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் ரோஜா கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலிருந்து பல வண்ண ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு வடிவமைப்புகளில் காட்சிப் படுத்தப்படவுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த ரோஜா பூங்காவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ரூ. 46 லட்சம் மதிப்பில் காட்சி அறையும் அமைக்கப்பட்டு வருவது இப்பூங்காவிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
