கடந்த 24 மணிநேரத்தில் கோவையில் 24 மி.மீ. மழை பதிவு

தமிழகத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பல இடங்களில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டியது. மேலும், 13-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், நேற்று மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக திருச்சி மாவட்டம் துவக்குடி மற்றும் மதுரையின் வடக்கு பகுதியான மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது.

அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில், மேலூரில் 60 மி.மீ. மழையும், துவக்குடி (இஸ்ரோ)வில் 57 மி.மீ. மழையும், மதுரை (இஸ்ரோ) 42 மி.மீ. மழையும், பாலக்கோடு 40 மி.மீ. மழையும், பெருந்துறை 31 மி.மீ. மழையும், போடி நாயக்கனூர் 26 மி.மீ. மழையும், கோவை (பெரிய நாயக்கன் பாளையம்) மற்றும் விருதுநகரில் தலா 24 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.



இனி வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள தமிழகம், கேரளா மற்றும் தெற்கு உள்கர்நாடகா மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, வெயிலின் தாக்கம் தணிந்துள்ளது, இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...