மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற சம்பவம் தமிழக வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப்., 16-ந்தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.
இதனிடையே, நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், அவர் சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார். இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் இருந்து விருதுநகர் கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், போலீசார் அவரை விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்டுத்தினர். அப்போது, அவரை மே 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற சம்பவம் தமிழக வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப்., 16-ந்தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.
இதனிடையே, நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், அவர் சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார். இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் இருந்து விருதுநகர் கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், போலீசார் அவரை விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்டுத்தினர். அப்போது, அவரை மே 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.