சமூக வலைதளங்களை அதிர வைக்கும் 'காலா' படத்தின் பாடல்கள்

பா. இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல்களை இணையதளத்தில் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டார்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல்களை இணையதளத்தில் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டார். 

ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 9-ஆம் தேதி) மாலை நடைபெற இருக்கிறது. 

படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. காலா படத்தின் தமிழ் பதிப்பில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன. மற்ற மொழிகளில் 8 பாடல்களும் உள்ளன. இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில், பாடல்கள் இன்று காலை 9 மணிக்கு, அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் என்று ‘காலா’ படத்தை தயாரித்துள்ள நடிகர் தனுஷ் நேற்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

அதன்படி, இன்று காலை 9 மணியளவில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடல்களை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். 

தற்போது, இந்தப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பா.இரஞ்சித் இயக்கத்தில் மும்பையைப் பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...