உயிரே போனாலும் வழக்கை விட மாட்டேன் : விஷ்ணுபிரியாவின் தந்தை கோவையில் பேட்டி

கோவை : டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரது தந்தை ரவி உயிரே போனாலும் வழக்கை விட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.


கோவை : டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரது தந்தை ரவி, உயிரே போனாலும் வழக்கை விட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். 

வழக்கு தொடர்பாக, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி-க்கு, நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதில், "விஷ்ணுபிரியா தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., கைவிட உள்ளது. இந்த வழக்கை வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ., தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கு சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், மே, 9-ல், நீதிமன்றத்தில் ஆஜராகி தெரியப்படுத்த வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, விஷ்ணுபிரியாவின் தந்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். 

வழக்கு விசாரணையின் போது, ரவி சி.பி.ஐ., அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அடுத்த வாய்தாவில் எதிர்ப்பிற்கான காரணத்தை தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ரவி, "என் உயிரே போனாலும் இந்த வழக்கை கைவிடமாட்டேன். நியாயம் பெறுவேன்." என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் அனிதா ரவி கூறுகையில், "இந்த வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை. சி.பி.ஐ., விசாரணை அறிக்கையை முழுமையாகப் படித்த பின் ஆட்சேபனைகளைத் தெரிவிப்போம்." என்றார்.

Video: Laxman

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...