விற்பனைக்கு தயாரான பொது இடம் மீட்பு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கோவை : தனியார் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட இருந்த 23 சென்ட் அளவிலான பொது இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை : தனியார் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட இருந்த 23 சென்ட் அளவிலான பொது இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 64-வது வார்டில், சுமார் 2.30 ஏக்கர் பரப்பளவில் ராம் ரெசிடென்சி என்ற குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அங்கு 23 சென்ட் அளவிற்கு மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடம் அமைந்துள்ளது.



பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய அந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது. சுற்றிலும் கம்பி வேலி அமைத்து அந்த இடத்தை விற்பனை செய்ய, குடியிருப்பு உரிமையாளர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து சவுரிபாளையத்தை சேர்ந்த ரிசர்வ் சைட் மீட்பு செயற்பாட்டாளரான தியாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, பொது இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள பொது இடத்தை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட இருந்த பொது இடத்தை மீட்ட அதிகாரிகள், 'இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என்ற அறிவிப்பு பலகையை வைத்துச் சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...