தெற்கு ஆசிய தடகள போட்டியில் சாதனை படைத்த கோவை வீரருக்கு உற்சாக வரவேற்பு

கோவை: தெற்கு ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த வீரருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை: தெற்கு ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த வீரருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளையோருக்கான தடகள போட்டிகள் கடந்த 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இலங்கை சுகதாசா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பூடான் உள்ளிட்ட 8 நாடுகளைச் 300-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்றனர். ஓட்டபந்தயம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள், 3 வீராங்கனைகள் என எட்டு பேர் பங்கேற்றனர்.

இதில், கோவை அச்சீவர்ஸ் அத்தலெடிக் கிளப்பைச் சேர்ந்த மாணவர் கமல்ராஜ், மும்முறை தாண்டுதல் (டிரிபிள் ஜம்ப்) போட்டியில் கலந்து கொண்டு 16.05 மீட்டர் நீளம் தாண்டி, தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு 15.74 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்து விமானம் மூலம் கோவை திரும்பிய காமராஜுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :- ஜூனியர் தடகள போட்டிகள் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் நான் பங்கேற்க உள்ளேன். அந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வதே தனது லட்சியம். தற்போது, ஆசிய அளவில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் ரேங்கிங்கில் முதல் இடத்திலும், உலக அளவில் 7-வது இடத்தில் இருக்கிறேன். மேலும், இட அளவில் முன்னேறக் கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனத் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...