இந்திய ராணுவத்திற்கு தேர்வான வீரத் தமிழச்சி அன்னபூரணி

தேனி: தமிழகத்தைச் சேர்ந்த வீரமங்கை அண்ணபூரணி இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.

தேனி: தமிழகத்தைச் சேர்ந்த வீரமங்கை அண்ணபூரணி இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணபூரணி. இவர், இந்தியா ராணுவத்தில் சேர்வதற்கு பல முறை முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், பெங்களூரூவில் ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் இந்திய சேவைகள் தேர்வு வாரியத்தில் தேர்வு எழுதினார். உலகில் 2-வது கடினமான விதிமுறைகளைக் கொண்ட இந்தப் பயிற்சி மையத்தில், வீரர்களுடன் சேர்ந்து, அவர்களுக்கு இணையான பயிற்சிகளைப் பெற்றார். ஏழைக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட வீரமங்கை அண்ணபூரணி, முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றதுடன், ராணுவ அதிகாரியாகவும் உயர்வு பெற்றார்.



தமிழகத்தில் இருந்து பல பெண்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக தேர்வாகியுள்ளனர். யாரும் பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், இதனை உடைத்தெறிந்து ஆன்டிப்பட்டியில் இருந்து இந்திய ராணுவத்தில் கமாண்டராக வீரத்தமிழச்சி அன்னபூரணி தேர்வாகியுள்ளார்.

ஏற்கனவே, போபால் மற்றும் அலகாபாத்தில் நடைபெற்ற இரண்டு தேர்வுகளில் தோல்வியடைந்த அவர், தனது பெற்றோர்களின் ஆதரவாலும், ஊக்கத்தாலும் 3-வது முறையாக தேர்வு எழுதி, ராணுவத்திற்கு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த வீரமங்கைக்கு நமது சல்யூட்..!

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...