தமிழகத்தை புழுதி புயல் தாக்க வாய்ப்பு உள்ளதா?: வேளாண் பல்கலை., விளக்கம்

கோவை: ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, டெல்லி, உத்தரகாண்ட உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதி புயல் தாக்கியதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, டெல்லி, உத்தரகாண்ட உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதி புயல் தாக்கியதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த இந்த புயலால் வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த புழுதி புயல் தமிழகத்தை தாக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், "தமிழகத்தை புழுதி புயல் தாக்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது, சுழல் காற்று காரணமாக நிலத்தின் மீது உள்ள மண், காற்றில் கலந்து புழுதி புயல் ஏற்படுகின்றது. வடமாநிலங்களில் மண்ணின் பிடிப்புத் தன்மை குறைவு.

வடமாநிலங்களில் வீசக் கூடிய காற்றைப் போல் தமிழகத்தில் வேகமாக காற்று வீசாது. அதே நேரம் தமிழகத்தில் உள்ள மண்ணின் பிடிப்புத் தன்மை அதிகம். ஆகையால் புழுதி புயல் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மழை-வெயில்

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேர வெப்பநிலையானது குறைந்துள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேர வெப்பநிலையானது 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.காற்றின் வேகம் 12 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து, இரண்டு நாட்களுக்குள் குறைந்து 8 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...