பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

மாணவ, மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, பள்ளி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் பள்ளி விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பள்ளி வாகன சோதனை கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் இன்றும், நாளை மறுதினமும் நடக்கிறது.



இன்று மட்டும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 488 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு வந்து உள்ளன. இந்த வாகனங்களில் பள்ளியின் பெயர், முகவரி, குழந்தைகள் ஏறிச் செல்லும் படிகளின் அளவு, ஜன்னல்களின் அளவு, எதிரொலிக்கும் ஸ்டிக்கர்கள், நம்பர் பிளேட்டுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள், அவசர கால வழி, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 19 வகையான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வாகனம் இயக்குவது மற்றும் பராமரிப்பு குறித்து அறிவுரைகளும் வழங்கப்பட்டது. அதேபோல, 16 வகையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.



இந்த ஆய்வில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பேசுகையில், "இந்த ஆய்வானது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் வருவாய் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டும் ஆய்வுப் பணி முதற்கட்டமாக நடைபெறுகிறது. இதில், பள்ளி வாகனங்களில் அவசரகால வழி படிக்கட்டுகளின் அளவுகள் போன்ற 19 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன," என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...