திருப்பூர் : திருப்பூரில் கழிவு பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.
திருப்பூர் : திருப்பூரில் கழிவு பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

மங்கலம் அருகேயுள்ள வேட்டுவபாளையத்தில் சையது இப்ராஹீம் என்பவருக்கு சொந்தமான கழிவுப்பஞ்சு அரவை மில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மில்லின் உள்ளே திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பஞ்சு என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்த, தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான, டன் கணக்கில் பஞ்சுகள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மங்கலம் அருகேயுள்ள வேட்டுவபாளையத்தில் சையது இப்ராஹீம் என்பவருக்கு சொந்தமான கழிவுப்பஞ்சு அரவை மில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மில்லின் உள்ளே திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பஞ்சு என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்த, தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான, டன் கணக்கில் பஞ்சுகள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.