நீலகிரி: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நீலகிரி: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியாவில் முதன்முறையாக கடற்கரை கால்பந்து போட்டிகள் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க தமிழகம், குஜராத், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த அணிகள் தேர்வாகியுள்ளன. இதில், விளையாடும் தமிழ்நாடு அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கடற்கரை கால்பந்தாட்ட வீரர்கள் 4 பேரும், படுகர் இனத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் தேர்வாகியுள்ளனர். இதற்கான வீரர்கள் அறிமுகம் கூட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது.
இதனையடுத்து, வீரர்களை உருவாக்கிய ராமன் ரகுநாத் கூறுகையில், "இதுவரையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மிக சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கி, இந்திய கால்பந்து அணியில் பங்கேற்க செய்துள்ளேன். புட்வாலி என்றழைக்கப்படும் போட்டியில் இதுவரை மூன்று வீரர்களை சர்வதேச அளவில் பங்கேற்க செய்துள்ளேன். தற்போது, கடற்கரை கால்பந்து போட்டியில் தமிழக அணிக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து வீரர்களை தேர்வு செய்ய வைத்துள்ளேன். இது நீலகிரி மாவட்ட மக்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது," அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் முதன்முறையாக கடற்கரை கால்பந்து போட்டிகள் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க தமிழகம், குஜராத், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த அணிகள் தேர்வாகியுள்ளன. இதில், விளையாடும் தமிழ்நாடு அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கடற்கரை கால்பந்தாட்ட வீரர்கள் 4 பேரும், படுகர் இனத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் தேர்வாகியுள்ளனர். இதற்கான வீரர்கள் அறிமுகம் கூட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது.
இதனையடுத்து, வீரர்களை உருவாக்கிய ராமன் ரகுநாத் கூறுகையில், "இதுவரையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மிக சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கி, இந்திய கால்பந்து அணியில் பங்கேற்க செய்துள்ளேன். புட்வாலி என்றழைக்கப்படும் போட்டியில் இதுவரை மூன்று வீரர்களை சர்வதேச அளவில் பங்கேற்க செய்துள்ளேன். தற்போது, கடற்கரை கால்பந்து போட்டியில் தமிழக அணிக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து வீரர்களை தேர்வு செய்ய வைத்துள்ளேன். இது நீலகிரி மாவட்ட மக்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது," அவர் தெரிவித்தார்.
