கோவை : நரசிபுரம் பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை : நரசிபுரம் பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் சுந்தரவயலை அடுத்த நரசிபுரம் பகுதியில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்திருந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்ற அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அந்த யானைக்கு குடல் சமந்தமான நோய் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது யானைகளுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனை தான் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
தற்போது, அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.