பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டது : தனியரசு கடும் தாக்கு

கோவை : நீட் விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டதாக கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை : நீட் விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டதாக கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை செல்வதற்காக இன்று கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- 

நீட் கட்டாயம் என்று கூறியதே தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்ததுவிட்டது. இந்த நிலையில், நீட் தேர்வு மையம் அமைப்பதில் மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்காமல், மாநில அரசு துணையாக இருந்துள்ளது. வெளி மாநிலங்களில் தேர்வு மையம் கிடைத்த மாணவர்கள் உளவியல் ரீதியாகவும், மொழி மற்றும் சூழ்நிலை ரீதியாகவும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். 

எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து வருகிறது. இந்த பிரச்சனையில் மாநில அரசின் இயலாமையை வன்மையாக கண்டிக்கிறோம். 

போராட்டம் 

ஏழு கோடி தமிழர்களும் சாதி, மதம், அரசியல் கடந்து காவிரியை பெறுவதிலும், நீட்டை ஒழிப்பதிலும் போராட வேண்டும். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பா.ஜ.க., கேள்விக் குறியாக்கியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசுக்கு, மாநில அரசு துணை போவதாக சந்தேகம் உள்ளது. மாநில உரிமைகளுக்காக தமிழக முதலமைச்சர் அறவழிப் போராட்டம் நடத்தியிருந்தால், தேசம் தழுவிய கவனத்தை ஈர்த்து இருக்கலாம். இனியாவது மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பிரதமரை சந்திப்பது நிராகரிக்கப்பட்டால், அவர்கள் இருவரும் மத்திய அரசைக் கண்டித்து அற வழியில் போராட வேண்டும். மேலும், சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களையும், காவிரிக்கு எதிரான அனைத்துக் கட்சி தீர்மானத்தையும் மதிக்காத மத்திய அரசைக் கண்டித்து வலிமையான போராட்டத்தை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...