மாணவர்களிடையே அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்க்க பயிற்சி

கோவை : மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக மூன்று நாள் பயிற்சி வகுப்பு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.


கோவை : மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக மூன்று நாள் பயிற்சி வகுப்பு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. 

கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் 'ஸ்கூல் ஆஃப் சைன்ஸ்' என்ற அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு சார்பில் வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பார்க் ரெசிடென்சி அரங்கில் நடைபெறும் இந்த கலந்து கொள்ள மாணவர்களுக்கு ரூ.2,500 பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

இது குறித்து 'ஸ்கூல் ஆஃப் சைன்ஸ்' அமைப்பைச் சேர்ந்த வினீத் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது :- 

அறிவியல் குறித்து குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பயிற்சி வகுப்பின் குறிக்கோளாகும்.  6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கென நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பு அறிவியல் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். அவர்களை அறிவியல் பூர்வமாக சிந்திக்க வைக்கும். பொதுவாக 10 முதல் 14 வயதுடைய மாணவர்கள் அறிவியல் குறித்து அறிந்து கொள்ள தொடங்குகிறார்கள்.  

நாங்கள் அவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சி மூலம் அறிவியலை உணர்த்துவோம்.  இந்த பயிற்சி வகுப்பில் அடிப்படை இயற்பியல், காமிரா செயல்பாடு, வாகன இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும். மேலும், தகவல்களைப் பெற பின்வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். +91 80984 47132. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...