நீட் தேர்வுக்கு இந்தியில் வினாத்தாள்கள் : தாமதமாக தேர்வெழுதிய தமிழக மாணவர்கள்

மதுரை: மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுரை: மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதற்கான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 மாணவர்களுக்கு இந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. இதனால், அந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இதனையடுத்து, ஆங்கிலம், தமிழ் வினாத்தாள்களுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி 120 மாணவர்களையும் தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள்ளேயே தேர்வு அதிகாரிகள் அமரவைத்திருந்தனர்.

பெற்றோர் உட்பட யாருமே அந்த மாணவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த 120 மாணவர்களுக்கும் அங்கேயே மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், மிகவும் தாமதமாக ஆங்கிலம், தமிழ் மொழிகளில் அந்த மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வினாத்தாள் மொழிச் சிக்கலால் காக்க வைக்கப்பட்டிருந்த 120 மாணவர்களும், பிற்பகல் 2.40 மணிக்கு நீட் தேர்வை எழுதினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...