மதுரை: மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
மதுரை: மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதற்கான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 மாணவர்களுக்கு இந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. இதனால், அந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இதனையடுத்து, ஆங்கிலம், தமிழ் வினாத்தாள்களுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி 120 மாணவர்களையும் தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள்ளேயே தேர்வு அதிகாரிகள் அமரவைத்திருந்தனர்.
பெற்றோர் உட்பட யாருமே அந்த மாணவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த 120 மாணவர்களுக்கும் அங்கேயே மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், மிகவும் தாமதமாக ஆங்கிலம், தமிழ் மொழிகளில் அந்த மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வினாத்தாள் மொழிச் சிக்கலால் காக்க வைக்கப்பட்டிருந்த 120 மாணவர்களும், பிற்பகல் 2.40 மணிக்கு நீட் தேர்வை எழுதினர்.
மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதற்கான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 மாணவர்களுக்கு இந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. இதனால், அந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இதனையடுத்து, ஆங்கிலம், தமிழ் வினாத்தாள்களுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி 120 மாணவர்களையும் தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள்ளேயே தேர்வு அதிகாரிகள் அமரவைத்திருந்தனர்.
பெற்றோர் உட்பட யாருமே அந்த மாணவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த 120 மாணவர்களுக்கும் அங்கேயே மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், மிகவும் தாமதமாக ஆங்கிலம், தமிழ் மொழிகளில் அந்த மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வினாத்தாள் மொழிச் சிக்கலால் காக்க வைக்கப்பட்டிருந்த 120 மாணவர்களும், பிற்பகல் 2.40 மணிக்கு நீட் தேர்வை எழுதினர்.