கோவை : கோவை 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ் நகர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் 'அட்ராய்ட் பவர் சிஸ்டம்' நிறுவனத்தினர் இன்று ஈடுபட்டனர்.
கோவை : கோவை 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ் நகர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் 'அட்ராய்ட் பவர் சிஸ்டம்' நிறுவனத்தினர் இன்று ஈடுபட்டனர்.
அட்ராய்ட் பவர் சிஸ்டம் நிறுவனத்தினர் 'சமுதாயத்திற்காக வாரம் ஒரு மணி நேரம்' என்ற பெயரில் வாரந்தோறும் ஒரு வார்டை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று கோவை 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ் நகர் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொது இடங்களில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அந்நிறுவன ஊழியர்கள் அகற்றினர்.
இது குறித்து அந்த நிறுவன ஊழியர்கள் கூறுகையில், "இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களும், தனியார் நிறுவன ஊழியர்கள் தாமாக முன்வந்து நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசமாட்டோம் என்ற உறுதியினையும் அளிக்கின்றனர்." என்றனர்.