கோவையில் அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கணவர் இல்லாத பெண்களிடம், அரசின் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கணவர் இல்லாத பெண்களிடம்,  அரசின் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.



திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்(50). இவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று படிப்பறிவற்ற பொதுமக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் பொள்ளாச்சியில் உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில், தான் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறியதோடு, கணவன் இல்லாத பெண்களிடம், அரசின் விதவை உதவித் தொகை ரூ. 2,500 மாதந்தோறும் வாங்கித் தருவதாக கூறினார். மேலும்,  உதவித் தொகை பெறுவதற்கு முன் பதிவு தொகை செலுத்த வேண்டும் என்று கூறிய அவர் பெண்களிடம் ரூ. 500 வசூலித்தார். 

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது,  போலியாக மோசடி செய்வது தெரியவந்துள்ளது. தொடர்ந்து செந்திலை பிடித்து அவரது கையில் இருந்த பையில் சோதனை செய்தனர். இதில் கோவை மாநகரில் வயது முதிர்ந்த பெண்களிடம் பணம் ஏமாற்றியதும் தெரியவந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், போலி அரசு அலுவலரை சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோசடியில் ஈடுபட்ட நபரைப் பிடித்தனர். அப்போது, தான் ஒரு அனாதை என்று கூறிய செந்தில் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். இதனால் மனம் இறங்கிய போலீசார் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அறிவுரை கூறி  அனுப்பி வைத்தனர். 



இந்த சம்பவம் குறித்த அப்பகுதியை சேர்ந்த சதாம் கூறுகையில், " அதிகாரி போல் நடித்து வயதானவர்களிடம் பணம் பறித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்த போது தான் அவர் மோசடி ஆசாமி என்பது தெரியவந்தது. வறுமையில் இருக்கும் முதியவர்களைக் குறி வைத்து ஏமாற்றும் இவர் போன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்." என்றார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...