கோவை : நாடு முழுவதும் இன்று தொடங்கிய நீட் தேர்வை கோவை மாவட்டத்தில் இருந்து 15,960 மாணவர்கள் எழுதுகின்றனர்.
கோவை : நாடு முழுவதும் இன்று தொடங்கிய நீட் தேர்வை கோவை மாவட்டத்தில் இருந்து 15,960 மாணவர்கள் எழுதுகின்றனர்.
மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை, 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மொத்தம் உள்ள 60 ஆயிரத்து 990 மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கென 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாணவர்கள் மற்றும் மாணவிகள் என 15,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பலத்த சோதனைக்கு பின்னரே மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தலைமுடியில் பின்னல் போட்டு வந்திருந்த மாணவிகளின் பின்னல் அகற்றப்பட்ட பின்பே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், காதணி, உள்ளிட்டவற்றை அணிந்து வந்திருந்த சில மாணவிகளின் ஆபரணங்களையும் அகற்றிய பின்னரே மாணவிகளை தேர்வு மைய அதிகாரிகள் அனுமதித்தனர்.