கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிகளுக்கு எதிரே கட்டப்பட்டுள்ள நூலகங்கள் பூட்டியே கிடப்பதால், சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருவது மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிகளுக்கு எதிரே கட்டப்பட்டுள்ள நூலகங்கள் பூட்டியே கிடப்பதால், சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருவது மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
மேட்டுப்பாளையத்தைப் பொறுத்தவரையில் 75 சதவீதம் கிராமங்களை கொண்ட பகுதி. கிராமப்புற மாணவர்கள் கல்வி பயிலவும், விலை உயர்ந்த புத்தகங்களை எளிதில் பெறவும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையத்தின் பல்வேறு ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் சுமார் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. குறிப்பாக, கிராமங்களுக்கு நடுவேயும், அரசு பள்ளிகளுக்கு அருகாமையிலும் இந்த நூலகங்கள் அமைக்கப்பட்டன.
கல்வி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த நூலகங்கள் திறக்கப்பட்டன. இதற்காக, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பதிப்பகங்களில் இருந்து ஏழை மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், அரிய புத்தகங்களும் வாங்கப்பட்டன. மாணவர்களுக்கு கல்வி ஊக்கம் அளிக்கும் வகையில், செயல்படுத்தப்பட்ட இந்த நூலகங்கள் கடந்த 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கின்றன.
கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் சாலைவேம்பு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டி கொடுக்கப்பட்ட நூலகம் புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்ட நிலையிலும், திறக்கப்படாமலேயே இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு முன்பாக அமைந்துள்ள இந்த நூலகத்தின் கட்டிடம், தற்போது ஊராட்சியின் கழிவு பொருட்களின் அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. தெருவிளக்குகளில் இருந்து கழற்றப்பட்ட விளக்குகள், உடைந்த மேசை, நாற்காலிகள் மற்றும் தேவையற்ற ஊராட்சி நிர்வாகத்தின் ஆவணங்களை வைக்கும் அறையாக மாறியுள்ளது.
மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் சிதறி கிடப்பதுடன், பராமரிப்பு இன்றி கிடப்பதால் அவை குப்பைகளாகவும், எலிகளுக்கு உணவாகவும் இருந்து வருகிறது. மேலும், மருதூர் ஊராட்சிக்குட்பட்ட கனுவாய்ப்பாளையம் ஊராட்சி பள்ளிக்கு எதிரே கட்டப்பட்ட நூலகமும் இதுவரை திறக்கப்படாமல் குப்பைகளைக் கொட்டி வைக்கும் குப்பை தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், எப்போதும் திறந்தே இருக்கும் இந்தக் கட்டிடத்தில் போதை ஆசாமிகள் அரங்கேற்றங்களும் அத்துமீறிக் கொண்டே இருக்கிறது.
இந்த நூலகக் கட்டிடத்தில் இரவில் பாய் விரித்துப் படுத்து தூங்கும் சமூகவிரோதிகள் மது குடித்து விட்டு மதுபாட்டில்களையும், போதை வஸ்துக்களையும் போட்டு வைக்கும் கூடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு அமைத்த இந்த நூலகம் இதுவரை பயன்பாட்டிற்கே வராததால், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து கிராமத்துக்கு செல்ல வேண்டியுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பூட்டியே கிடக்கும் இந்த நூலகங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தைப் பொறுத்தவரையில் 75 சதவீதம் கிராமங்களை கொண்ட பகுதி. கிராமப்புற மாணவர்கள் கல்வி பயிலவும், விலை உயர்ந்த புத்தகங்களை எளிதில் பெறவும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையத்தின் பல்வேறு ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் சுமார் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. குறிப்பாக, கிராமங்களுக்கு நடுவேயும், அரசு பள்ளிகளுக்கு அருகாமையிலும் இந்த நூலகங்கள் அமைக்கப்பட்டன.
கல்வி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த நூலகங்கள் திறக்கப்பட்டன. இதற்காக, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பதிப்பகங்களில் இருந்து ஏழை மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், அரிய புத்தகங்களும் வாங்கப்பட்டன. மாணவர்களுக்கு கல்வி ஊக்கம் அளிக்கும் வகையில், செயல்படுத்தப்பட்ட இந்த நூலகங்கள் கடந்த 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கின்றன.
கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் சாலைவேம்பு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டி கொடுக்கப்பட்ட நூலகம் புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்ட நிலையிலும், திறக்கப்படாமலேயே இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு முன்பாக அமைந்துள்ள இந்த நூலகத்தின் கட்டிடம், தற்போது ஊராட்சியின் கழிவு பொருட்களின் அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. தெருவிளக்குகளில் இருந்து கழற்றப்பட்ட விளக்குகள், உடைந்த மேசை, நாற்காலிகள் மற்றும் தேவையற்ற ஊராட்சி நிர்வாகத்தின் ஆவணங்களை வைக்கும் அறையாக மாறியுள்ளது.
மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் சிதறி கிடப்பதுடன், பராமரிப்பு இன்றி கிடப்பதால் அவை குப்பைகளாகவும், எலிகளுக்கு உணவாகவும் இருந்து வருகிறது. மேலும், மருதூர் ஊராட்சிக்குட்பட்ட கனுவாய்ப்பாளையம் ஊராட்சி பள்ளிக்கு எதிரே கட்டப்பட்ட நூலகமும் இதுவரை திறக்கப்படாமல் குப்பைகளைக் கொட்டி வைக்கும் குப்பை தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், எப்போதும் திறந்தே இருக்கும் இந்தக் கட்டிடத்தில் போதை ஆசாமிகள் அரங்கேற்றங்களும் அத்துமீறிக் கொண்டே இருக்கிறது.
இந்த நூலகக் கட்டிடத்தில் இரவில் பாய் விரித்துப் படுத்து தூங்கும் சமூகவிரோதிகள் மது குடித்து விட்டு மதுபாட்டில்களையும், போதை வஸ்துக்களையும் போட்டு வைக்கும் கூடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு அமைத்த இந்த நூலகம் இதுவரை பயன்பாட்டிற்கே வராததால், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து கிராமத்துக்கு செல்ல வேண்டியுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பூட்டியே கிடக்கும் இந்த நூலகங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.