நீலகிரி: நீலகிரிமாவட்டம் கோத்தகிரியில் இன்று தொடங்கிய 10-வது காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரிமாவட்டம் கோத்தகிரியில் இன்று தொடங்கிய 10-வது காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இன்று தொடங்கியது.

தொடர்ந்து, இரு நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சி மற்றும் கோடை விழாவைச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.

கோடை விடுமுறையைக் கழிக்க நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்தக் காய்கறி கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறை மற்றும் காய்கறி உற்பத்தி தொடர்பான விளக்க அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், மைசூர் கத்திரிக்காயை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மெகா நந்தி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதுதவிர, காய்கறிகளால் உருவாக்கப்பட்ட ரங்கநாதர் சிலை, மீன் உருவம், பட்டுப்பூச்சி உருவம், அலங்காரக் கோலம் மற்றும் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் விளைந்த மலை காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜான் சலிவன் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசத்து வருகின்றனர்.


கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இன்று தொடங்கியது.

தொடர்ந்து, இரு நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சி மற்றும் கோடை விழாவைச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.

கோடை விடுமுறையைக் கழிக்க நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்தக் காய்கறி கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறை மற்றும் காய்கறி உற்பத்தி தொடர்பான விளக்க அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், மைசூர் கத்திரிக்காயை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மெகா நந்தி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதுதவிர, காய்கறிகளால் உருவாக்கப்பட்ட ரங்கநாதர் சிலை, மீன் உருவம், பட்டுப்பூச்சி உருவம், அலங்காரக் கோலம் மற்றும் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் விளைந்த மலை காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜான் சலிவன் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசத்து வருகின்றனர்.
