சர்வதேச பத்திரிக்கையாளர் தினம் : கோவையில் சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவை: சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 பத்திரிக்கையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சாந்தம் சமூக சேவை சங்கம் பாராட்டியது.

கோவை: சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 பத்திரிக்கையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சாந்தம் சமூக சேவை சங்கம் பாராட்டியது. 

காந்திபுரம் அருகே உள்ள மேரிராணி பள்ளியில் சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, சாந்தம் சமூக சேவை சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த பத்து பத்தியாளர்களை தேர்வு செய்து விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 



கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் சிம்ப்ளிசிட்டியின் சிறப்பு செய்தியாளர் ஏ. ஜெரால்டு, மலையாள நாளிதழ் மாத்ரூபூமியைச் சேர்ந்த சுதிந்திர குமார், விஜய பாஸ்கர், மாலைமுரசு தொலைக்காட்சியின் முருகேஷ், மக்கள் தொலைக்காட்சியின் கணேஷ், புதிய தலைமுறையின் சுரேஷ், பாலிமர் தொலைக்காட்சியின் அருண் குமார், தினத்தந்தி நாளிதழின் ஆனந்த், லோட்டஸ் தொலைக்காட்சியின் ஜான் தினகரன் மற்றும் மலையாள நாளிதழ் தீபிகாவின் சந்தோஷ் ஜார்க் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி, பாராட்டப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் சாந்தம் சமூக சேவை சங்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜியோ குன்னத்துபரம்பில் கூறுகையில், "செய்தி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு குழந்தைகள் மத்தியில் ஏற்படவே, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனெனில், குழந்தைகள் பெரும்பாலும், ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.  புத்தகம் வாசிப்பது, செய்தித்தாள்களை படிப்பது போன்றவற்றை மறந்து, உடல்நலத்திற்கு தீங்கை ஏற்படுத்திக் கொள்கின்றனர்," என்றார்.  

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...