திருப்பூரில் கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

திருப்பூர் : திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

கணியாம்பூண்டியில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (32) என்பவர் சிவன்மலை என்ற பெயரில் கிளீனிக்கை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், அனுபவத்தின் மூலமாக மட்டுமே சிகிச்சை வழங்கி வருவதாக அந்தப் பகுதியினர், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளையில் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை நிர்வாகிகள் நடத்திய விசாரணையில், ஆனந்த் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை இணை இயக்குநர் மருத்துவர் சுந்தர்ராஜன் தலைமையில் மருத்துவத் துறை அதிகாரிகள் கணியாம்பூண்டியில் ஆனந்த் நடத்தி வந்த கிளீனிக்கை ஆய்வு செய்து சோதனை நடத்தினர். அப்போது, அவருடைய சான்றிதழ்களை சரிபார்த்த போது, அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர், இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார், ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...