சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து

கோவை: அரக்கோணம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: அரக்கோணம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில் விடுத்துள்ள அறிவிப்பில் :- அரக்கோணம் ரயில்வே கோட்டத்தில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்தப் பணிகள் இன்றோ அல்லது நாளையோ முடிவு பெறும். இந்தப் பொறியியல் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக நாளைய (மே 06) ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து கோவை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் சேவைகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.  

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம் :

1. (ரயில் எண். 12674) கோவை - சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், 2. (ரயில் எண். 12675) சென்னை சென்ட்ரல் - கோவை வரை இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், (ரயில் எண். 12676) கோவை - சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் நாளை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல,  நாளை இயக்கப்படும் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது..

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...