மழைநீர் தேங்கிய குழியில் விழுந்து சிறுவன் பலி : பேரூராட்சி அலுவலகத்தை சி.பி.எம்., கட்சியினர் முற்றுகை

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு, பேரூராட்சியின் அலட்சியமே காரணம் எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு, பேரூராட்சியின் அலட்சியமே காரணம் எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் இந்திரா நகர் பகுதி உள்ளது. சுகாதாரப் பணியில் ஈடுபடும் தலித், அருந்ததியர் வாழும் இப்பகுதியில் பேரூராட்சியின் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை. இந்நிலையில், அந்தப் பகுதியில் வசித்து வரும் சோமசுந்தரம், சாந்தாமணி தம்பதியினரின் மகன் மனோஜ்குமார் (10), சாக்கடை, மழைநீர் தேங்கிய குழியில் விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கடந்த இரண்டு நாட்களாகக் கோவையில் பலத்த மழை இரவு நேரத்தில் பெய்து வருகிறது. மற்ற பகுதிகளைக் காட்டிலும் அன்னூர் பகுதியில் மழையின் அளவு கூடுதலாக பதிவாகியுள்ள நிலையில், சாக்கடை நீர் வெளியேற வழியில்லாமலும், தேங்கிய மழைநீர் வெளியேற வடிகால் வசதியில்லாததாலும், குழியான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக அந்தக் குழியில் விழுந்து உயிரிழந்தான். 



இந்த நிலையில், சிறுவனின் மரணத்திற்கு அன்னூர் பேரூராட்சியின் அலட்சிமே காரணம் எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அன்னூர் ஒன்றிய செயலாளர் முகமதுமுசீர் தலைமையில் ஏராளமானோர் திரண்டு இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் பேச்சுவார்தை நடத்தி, பலியான சிறுவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என உறுதியளித்ததைத் தொடந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...