கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த இருநாட்களில் 3 கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரு சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த இருநாட்களில் 3 கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரு சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா வழக்கு ஒன்றில் கைதாகி சொக்கநாதன் என்பவர் கடந்த 16-ம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று, வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சொக்கநாதன் உயிரிழந்தார். அதேபோல, பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி, கோவை மத்திய சிறையில் இருந்த மற்றொரு கைதியான சீனிவாசன், திடீரென சிறையில் இருந்த மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோயிற்கு சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதியான உதயகுமார் என்பவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நேற்று முன்தினம் சிறையில் இருந்த இரு கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், தற்போது, மேலும் ஒரு கைதி இறந்திருப்பது அனைவரிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர் சிறை மரணங்களால், கோவை மாவட்ட சிறைச்சாலையின் மருத்துவ சிகிச்சை முறை பற்றியும் சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும், சிறைவாசிகளுக்கு மனரீதியான ஆலோசனைகளை வழங்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல பணியின் போது இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள், சிறைவாசிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதனிடையே, பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்ட தலைமை வார்டன் திருநாவுக்கரசு மற்றும் வார்டன் பழனிவேலு ஆகிய இரண்டு சிறை வார்டன்களையும் கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
கஞ்சா வழக்கு ஒன்றில் கைதாகி சொக்கநாதன் என்பவர் கடந்த 16-ம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று, வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சொக்கநாதன் உயிரிழந்தார். அதேபோல, பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி, கோவை மத்திய சிறையில் இருந்த மற்றொரு கைதியான சீனிவாசன், திடீரென சிறையில் இருந்த மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோயிற்கு சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதியான உதயகுமார் என்பவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நேற்று முன்தினம் சிறையில் இருந்த இரு கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், தற்போது, மேலும் ஒரு கைதி இறந்திருப்பது அனைவரிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர் சிறை மரணங்களால், கோவை மாவட்ட சிறைச்சாலையின் மருத்துவ சிகிச்சை முறை பற்றியும் சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும், சிறைவாசிகளுக்கு மனரீதியான ஆலோசனைகளை வழங்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல பணியின் போது இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள், சிறைவாசிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதனிடையே, பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்ட தலைமை வார்டன் திருநாவுக்கரசு மற்றும் வார்டன் பழனிவேலு ஆகிய இரண்டு சிறை வார்டன்களையும் கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.