தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று தேர்வெழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று தேர்வெழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் வரும் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையம் அமைக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ., சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கியதை மாற்ற மறுப்பு தெரிவித்ததுடன், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்திற்கு சென்று தேர்வு எழுத வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மையங்களை மாற்ற முடியாது. அடுத்தாண்டு முதல் தமிழக மாணவர்கள் சிரமமின்றி தேர்வு நடவடிக்கை எடுக்க சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மைனர் என்ற நிலையில், அண்டை மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதுவது, மிகுந்த சிரமத்திற்குள்ளான காரியமாகும்.
நாடு முழுவதும் வரும் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையம் அமைக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ., சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கியதை மாற்ற மறுப்பு தெரிவித்ததுடன், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்திற்கு சென்று தேர்வு எழுத வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மையங்களை மாற்ற முடியாது. அடுத்தாண்டு முதல் தமிழக மாணவர்கள் சிரமமின்றி தேர்வு நடவடிக்கை எடுக்க சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மைனர் என்ற நிலையில், அண்டை மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதுவது, மிகுந்த சிரமத்திற்குள்ளான காரியமாகும்.