தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இன்று தொடங்கிய இந்த ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு 30-ம் தேதி வரை நடக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இன்று தொடங்கிய இந்த ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு 30-ம் தேதி வரை நடக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு ஆன்-லைனில் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை இன்று முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும். மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, கலந்தாய்வில் பங்கேற்கலாம். விண்ணப்பத்தை எப்படிப் பதிவு செய்வது என்பன உள்ளிட்ட முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.annauniv.edu மற்றும் http://tnea.ac.in என்ற இணையதளங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்யலாம். இணையவசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்புக்காக அமைக்கப்பட்டுள்ள 42 மையங்களில் பதிவு செய்யலாம்.
மேலும், கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 044-22359901 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.