திருப்பூர் : திருப்பூர் அருகே தோட்டங்களில் கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை போலீசார் அடித்து உடைத்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைத் தரக்குறைவாக பேசியதால், பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.
திருப்பூர் : திருப்பூர் அருகே தோட்டங்களில் கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை போலீசார் அடித்து உடைத்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைத் தரக்குறைவாக பேசியதால், பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.

பல்லடத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாய தோட்டங்களில் கள் இறக்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, கடந்த சில தினங்களாக பல்லடம் போலீசார், கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை உடைத்தும், பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, பல்லடம் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த பல்வேறு விவசாய சங்கத்தினர், முற்றுகையிட்டு கள் இறக்க அனுமதி வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இன்றும் பல்வேறு பகுதி தோட்டங்களில் கள் இறக்கக் கட்டியிருந்த பானைகளை போலீசார் அடித்து நொறுக்கினர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் காட்டூர் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த போலீசார், விவசாயிகளை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த மகேஷ் என்ற விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்த விவசாயிகள் உடனடியாக அவரை மீட்டு பொங்கலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பல்லடம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்வேறு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு பிறகும், கள் இறக்க தொடர்ந்து போலீசார் அனுமதி மறுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பல்லடத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாய தோட்டங்களில் கள் இறக்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, கடந்த சில தினங்களாக பல்லடம் போலீசார், கள் இறக்கப் பயன்படுத்தும் பானைகளை உடைத்தும், பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, பல்லடம் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த பல்வேறு விவசாய சங்கத்தினர், முற்றுகையிட்டு கள் இறக்க அனுமதி வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இன்றும் பல்வேறு பகுதி தோட்டங்களில் கள் இறக்கக் கட்டியிருந்த பானைகளை போலீசார் அடித்து நொறுக்கினர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் காட்டூர் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த போலீசார், விவசாயிகளை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த மகேஷ் என்ற விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்த விவசாயிகள் உடனடியாக அவரை மீட்டு பொங்கலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பல்லடம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்வேறு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு பிறகும், கள் இறக்க தொடர்ந்து போலீசார் அனுமதி மறுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.