வால்பாறை: ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
வால்பாறை: ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கோடை விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வால்பாறையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அதிலிருந்து விடுபட வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

வால்பாறையில் முக்கிய சுற்றுலாப் பகுதிகளான கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் அணை, சோலையார் அணை, புதுத்தோட்டம், சக்தி தலநார் காட்சிமுனை, நல்லமுடி காட்சிமுனை, நம்பர் பாறை, பாலாஜி கோவில், கருமலை தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்படுகின்றனர். இங்கு இருக்கும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளது. எனவே, விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சுற்றுலா வாகனங்களில் வரத்து அதிகரிப்பால், வால்பாறை டவுன் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
