கோவை: குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக நேற்று தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக நேற்று தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா, பான்மசாலா, பான்பராக் போன்றவை உற்பத்தி செய்யும் நிறுவனம் இயங்கி வந்தது. இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். நால்வரை கைது செய்தனர்.
இந்த நிலையில், குட்கா தொழிற்சாலைக்கு எதிராக தொழிற்சாலை முன்பு தி.மு.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கண்ணம்பாளையம் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சண்முகம், சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.
தி.மு.க-வினரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அக்கட்சியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இதே போல், சூலூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், தி.மு.க தொண்டர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " குட்கா தொழிற்சாலை உரிமையாளர் அமித் ஜெயினுக்கு கண்ணம்பாளையம் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அப்பட்டமான பொய். இந்த விவகாரத்தில் காவல் கண்காணிப்பாளருக்கும் தொடர்பு உள்ளது என்பதை எங்களால் நிருபிக்க முடியும். எனவே இதனை முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்." என்றார்.

மாவட்டம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.