நீலகிரி: உதகையில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்று முதல் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி: உதகையில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்று முதல் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.
உதகையில் வரும் 5-ம் தேதி முதல் கோடை விழா தொடங்கவுள்ள நிலையில், நடப்பாண்டு கோடை சீசனை சுற்றுலாப் பயணிகள் பல புதுமைகளுடன் கண்டு களிக்கும் வகையில் சுற்றுலா கமிட்டி பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
அதன் முதற் கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா சாலையில் கோடை விழாவில் முதல் முறையாக இரவு நேர அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இனி பொதுமக்கள் இரவில் பல்வேறு பொருட்களை வாங்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இரவு நேர அங்காடிகளை நேற்று மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அந்த அங்காடி மாலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர அங்காடி விற்பனை நடைபெறுவதால் குறிப்பிட்ட இடத்தில் சீசன் முடியும் வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதகையில் வரும் 5-ம் தேதி முதல் கோடை விழா தொடங்கவுள்ள நிலையில், நடப்பாண்டு கோடை சீசனை சுற்றுலாப் பயணிகள் பல புதுமைகளுடன் கண்டு களிக்கும் வகையில் சுற்றுலா கமிட்டி பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
அதன் முதற் கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா சாலையில் கோடை விழாவில் முதல் முறையாக இரவு நேர அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இனி பொதுமக்கள் இரவில் பல்வேறு பொருட்களை வாங்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இரவு நேர அங்காடிகளை நேற்று மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அந்த அங்காடி மாலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர அங்காடி விற்பனை நடைபெறுவதால் குறிப்பிட்ட இடத்தில் சீசன் முடியும் வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.