நீலகிரி: நீலகிரி மாவட்டம் 200-வது வயதைத் தொடுவதையொட்டி அம்மாவட்ட பழங்குடியின மக்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் 200-வது வயதைத் தொடுவதையொட்டி அம்மாவட்ட பழங்குடியின மக்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.

ஜான் சல்லிவன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டது நீலகிரி மாவட்டம். மலைகளின் அரசியான நீலகிரி இன்று உலகம் போற்றும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு மாவட்டம் புகழ் பெறக்கூடிய இடமாக உருவாகும் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மாவட்டம் முழுவதும் காடுகளும், மலைகளும் தான் காணப்பட்டது.

ஜான் சல்லிவன் அவர்களின் முயற்சியால் நீலகிரி மாவட்டம் உயிர் பெற்றது. இந்த கால நிலைக்கு ஏற்றவாறு தேயிலை செடிகள், உருளைக் கிழங்கு, போன்ற விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.

இப்படி படிப்படியாக உருவான நீலகிரி மாவட்டம் காலப்போக்கில் இங்குள்ள பழங்குடியின மக்களால் மேலும் புகழ் பெறத் தொடங்கியது.கலாச்சாரமும், பண்பும் நிறைந்த இம்மாவட்டம் 200-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது அனைத்துத் தரப்பு மலை மாவட்ட மக்களின் பெருமை.
உலக வரைபடத்தில் சுற்றுலா நகரங்களில் மலையரசியும் இடம் பிடித்திருப்பது முக்கியமான ஒன்று. இந்த நிலையில், 200-வது ஆண்டின் சிறப்புமிக்க விழாவை அம்மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். நகரின் வீதிகளின் வழியே ஊர்வலமாக பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்துடனும், பாடலுடனும் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இனி வரும் காலங்களில் மலை மாவட்டமான நீலகிரி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தனக்கான அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் எவ்வித ஐயமுமில்லை.

ஜான் சல்லிவன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டது நீலகிரி மாவட்டம். மலைகளின் அரசியான நீலகிரி இன்று உலகம் போற்றும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு மாவட்டம் புகழ் பெறக்கூடிய இடமாக உருவாகும் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மாவட்டம் முழுவதும் காடுகளும், மலைகளும் தான் காணப்பட்டது.

ஜான் சல்லிவன் அவர்களின் முயற்சியால் நீலகிரி மாவட்டம் உயிர் பெற்றது. இந்த கால நிலைக்கு ஏற்றவாறு தேயிலை செடிகள், உருளைக் கிழங்கு, போன்ற விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.

இப்படி படிப்படியாக உருவான நீலகிரி மாவட்டம் காலப்போக்கில் இங்குள்ள பழங்குடியின மக்களால் மேலும் புகழ் பெறத் தொடங்கியது.கலாச்சாரமும், பண்பும் நிறைந்த இம்மாவட்டம் 200-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது அனைத்துத் தரப்பு மலை மாவட்ட மக்களின் பெருமை.
உலக வரைபடத்தில் சுற்றுலா நகரங்களில் மலையரசியும் இடம் பிடித்திருப்பது முக்கியமான ஒன்று. இந்த நிலையில், 200-வது ஆண்டின் சிறப்புமிக்க விழாவை அம்மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். நகரின் வீதிகளின் வழியே ஊர்வலமாக பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்துடனும், பாடலுடனும் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இனி வரும் காலங்களில் மலை மாவட்டமான நீலகிரி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தனக்கான அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் எவ்வித ஐயமுமில்லை.