திருப்பூர்: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர்: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில்வே கூட் செட் தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கொடியேற்றினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக செயல்பட்டு ஜனநாயக ரீதியில் போராடிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை காவல்துறை தாக்கியது கண்டனத்துக்குரியது. கூட்டுறவுச் சங்கம் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதால் ஆளுநர் அமைத்த விசாரணை குழுவை கலைத்திட வேண்டும்." என்றார்.
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில்வே கூட் செட் தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கொடியேற்றினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக செயல்பட்டு ஜனநாயக ரீதியில் போராடிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை காவல்துறை தாக்கியது கண்டனத்துக்குரியது. கூட்டுறவுச் சங்கம் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதால் ஆளுநர் அமைத்த விசாரணை குழுவை கலைத்திட வேண்டும்." என்றார்.