மறைந்த ஆசிரியர்கள் நினைவாக குருபூஜை

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள வீரமாருதி தேகப்பயிற்சி சாலை சார்பில் மறைந்த ஆசிரியர்கள் நினைவாக குருபூஜை நடைபெற்றது.

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள வீரமாருதி தேகப்பயிற்சி சாலை சார்பில் மறைந்த ஆசிரியர்கள் நினைவாக குருபூஜை நடைபெற்றது.

மறைந்த பயில்வான் பழனியப்ப தேவர், சாண்டோ சின்னப்ப தேவர், கந்தசாமி ஆகியோரின் முயற்சியில் வீரமாருதி தேகபயிற்சி சாலை பயிற்சி கூடம் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கபட்டது.

இந்த உடற்பயிற்சி சாலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன், நம்பியார் கருணாநிதி ஆகியோர் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவர் அவர்களுக்கும் சினிமாவை தாண்டி நல்ல ஒரு நட்பு நிலவியதற்க்கு இந்த உடற்பயிற்சி கூடமும் ஒரு காரணமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் சினிமா படங்கள் கோவை பகுதிகளில் அமைந்திருந்த பச்சிராஜா ஸ்டுடியோ, செண்டரல் ஸ்டுடியோ ஆகியன இங்கிருந்ததும் ஏராளமான திரைபடங்கள் இங்கு எடுக்கபட்டதும் ஒரு காரணமாக இருந்தது. 

இதன் ஒரு பகுதியாக முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியர்களை நினைவு கூறும் வகையில் 23வது குருபூஜை இன்று நடைபெற்றது. பஜனை பாடல்களுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. முன்னதாக முன்னாள் ஆசிரியர்களின் உருவ படங்கள் மலர்களால் அலங்கரிக்கபட்டு மலர் அஞ்சலி செலுத்தபட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...