உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஜிப் லைன் சாகச விளையாட்டு

நீலகிரி : உதகையை அடுத்த தொட்டபெட்டா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிப் லைன் சாகச விளையாட்டு போட்டி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.


நீலகிரி : உதகையை அடுத்த தொட்டபெட்டா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிப் லைன் சாகச விளையாட்டு போட்டி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.



உதகையில் கேபிள் கார் திட்டம் குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தக் கேபிள் கார் திட்டம் கானல் நீராக உள்ள நிலையில், தொட்டபெட்டா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில், இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு 102 அடி உயரத்திற்கு கோபுரம் அமைக்கப்பட்டு, கேபிள் கார் போன்ற ஜிப் லைன் சாகச விளையாட்டு, கமோண்டோ பயிற்சி, தொங்கு பாலம் போன்ற விளையாட்டுகள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



 

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சாகச விளையாட்டுகள் ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு திறமையை வளர்ப்பதற்கும், அவர்களின் அச்சத்தை போக்குவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...