100-ஆம் ஆண்டில் விடைபெற்றது நல்லஆயன் பள்ளி

கோவை: கடந்த 99 ஆண்டுகளாக இயங்கி வந்த நல்லஆயன் உயர்நிலைப்பள்ளி, மாணவர் சேர்க்கை குறைவால் பள்ளி கல்வித்துறையால் மூடப்படுகிறது.


கோவை: கடந்த 99 ஆண்டுகளாக இயங்கி வந்த நல்லஆயன் உயர்நிலைப்பள்ளி, மாணவர் சேர்க்கை குறைவால் பள்ளி கல்வித்துறையால் மூடப்படுகிறது.

உக்கடத்தை அடுத்துள்ள கோட்டைமேடு பகுதியில் கடந்த 1917-ம் ஆண்டு துவக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு, 1927-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், 1947-ம் ஆண்டு மீண்டும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நல்லஆயன் உயர்நிலைப் பள்ளி, கல்விச் சேவையைத் தொடர்ந்து வந்தது. 



அரசின் உதவி பெற்று சுமார் 99 ஆண்டுகளாக இயங்கி வந்த இப்பள்ளி உக்கடம், டவுன்ஹால், சுங்கம் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை சமூகத்தில் தலை சிறந்தவர்களாக உருவாக்கி பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வந்தது. சென்ற கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால், இப்பள்ளி மூடப்படுவதாகப் பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, தனது 100-ம் ஆண்டில் கல்விச் சேவையிலிருந்து விடைபெற்றது நல்லஆயன் பள்ளி.

இதனையடுத்து, இப்பள்ளியில் 1994-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பாக மாற்று பள்ளிக்கு செல்லும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்குப் பிரிவு உபச்சார விழா, கோவை வெரைட்டி ஹால் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள் 60 பேர் மற்றும் 22 ஆசிரியர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு நல்லஆயன் பள்ளி பற்றிய தங்களின் நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு பிரியாவிடை பெற்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...