கோவை: குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
கோவை: குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இந்திய மருத்துவர் சங்கம் ஒருங்கிணைத்த இந்த மாரத்தான் போட்டியில் 10, 5 மற்றும் 3 கி.மீ முறையே மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் 900-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியின் மூலம் சேர்க்கப்படும் தொகை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படும் என்று மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பரிசுகளை வழங்கினார்.

இந்திய மருத்துவர் சங்கம் ஒருங்கிணைத்த இந்த மாரத்தான் போட்டியில் 10, 5 மற்றும் 3 கி.மீ முறையே மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் 900-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியின் மூலம் சேர்க்கப்படும் தொகை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படும் என்று மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பரிசுகளை வழங்கினார்.
