கோவையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் : விருந்தினர்களை ஆச்சரியப்படுத்திய திருமண வீட்டார்

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தொழிலதிபரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உடல், உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்வுகள் விழாவிற்கு வந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தொழிலதிபரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உடல், உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்வுகள் விழாவிற்கு வந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. 

ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் தொழிலதிபரான இமயவன் - அஞ்சுகம் என்பவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உடல், உறுப்பு தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரங்கு அமைக்கத் திருமண வீட்டாரின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உடல், உறுப்பு தானம் குறித்து கேட்டறிந்ததுடன், உடல், உறுப்பு தானம் செய்யவும் பதிவு செய்து கொண்டனர். 

திருமண விழாக்களில் உறவுகளையும், நண்பர்களையும் பார்த்து மகிழ்ச்சியடைவதோடு மட்டுமில்லாமல், உடல், உறுப்பு தானம் போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருமண விழாவிற்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், இதுபோன்று அனைத்து விஷேச நிகழ்வுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினால், உடல், உறுப்புகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். தங்கள் இல்லங்களில் நடக்கும் விழாக்களிலும் இதுபோல உடல் உறுப்பு தான நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்து இருக்கிறோம் என அவர்கள் கூறினர்.

வழக்கமாக திருமணம் போன்ற விழாக்களில் இறப்பு பற்றி பேசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், இந்த திருமண வரவேற்பு விழாவில் உடல், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாகத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். திருமண விழாவிற்கு வந்தவர்கள் ஆர்வத்துடன் வந்து விசாரித்து சென்றனர். இதுவரை 40 பேர் உடல், உறுப்பு தானம் செய்யப்பதிவு செய்திருப்பதாக அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.



"உடல், உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருமணப் பத்திரிகை கொடுக்கும்போதே இதுபோன்ற உடல், உறுப்பு தானம் நிகழ்ச்சி நடைபெறுவது பற்றி தெரிவித்திருந்தோம்," எனக் கூறுகின்றனர் புதுமணத் தம்பதிகள். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...