பேராசிரியை விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.


பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள  தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாகச் சர்ச்சையில் சிக்கிய  பேராசிரியை நிர்மலா தேவியின் வாட்ஸ்ஆப் ஆடியோ விவகாரம் தொடர்பாக, விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானத்தை நியமித்து ஆளுநர்  உத்தரவிட்டார். விசாரணை நடத்துவதற்காக மதுரை அரசு விருந்தினர் மாளிகை வந்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலை பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் துணைவேந்தர் செல்லதுரையிடம் விசாரணை நடத்தினார்.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி விருதுநகரில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், பேராசிரியை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 7 குழுக்கள் அமைக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர். எஸ்.பி., ராஜேஷ்வரி மற்றும் டி.எஸ்.பி., முத்து சங்கரலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...