மாநகரில் ஹெல்மெட் அணிந்து பயணித்த மகளிருக்கு ரோஜாப் பூ வழங்கிய குழந்தைகள்

கோவை: கோவை மாநகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்கி வந்த மகளிருக்கு பள்ளி சிறுமிகள் இனிப்பு மற்றும் ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கோவை: கோவை மாநகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்கி வந்த மகளிருக்கு பள்ளி சிறுமிகள் இனிப்பு மற்றும் ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் போக்குவரத்து காவலர்களுக்கான அலுவலக கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவல் ஆணையாளர், போக்குவரத்து துணை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொள்வர்.

அதன்படி, இந்த வாரம் நடந்த கூட்டத்தில் விழிப்புணர் நிகழ்ச்சிகளால் விபத்துக்கள் குறைந்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கும், கார்களில் சீட்பெல்ட் அணிந்து வருபவர்களுக்கும் இனிப்புகள், மற்றும் வாழ்த்துக்கள் கூறும் விதமாக ரோஜா பூக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, உதவி ஆணையாளர் (போக்குவரத்து) மகுடபதி, போக்குவரத்து ஆய்வாளர் (மேற்கு) சதாசிவம் மற்றும் உதவி ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியில் ஒப்பணக்கார வீதி மற்றும் வைசியாள் வீதி சிக்னலில் ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி சிறுமிகளை வைத்து இனிப்புகள் மற்றும் பூக்கள் வழங்கப்பட்டது.



இதில் நேற்று 80-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு "வெல்கம் ஹியரிங் ஹெல்மெட்" என்று புன்னகை பொங்க காவல்துறையுடன் இணைந்து சிறுமிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...