தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய 'டாடா-காபி' நிறுவனம்

வால்பாறை: வால்பாறையில் உள்ள 'டாடா-காபி' நிறுவனம் சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

வால்பாறை: வால்பாறையில் உள்ள 'டாடா-காபி' நிறுவனம் சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள டாடா-காபி நிறுவனத்திற்கு சொந்தமான உருளிக்கல் எஸ்டேட் தேயிலைத் தோட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயின்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் வால்பாறை தாலுகா அளவில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெறுபவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.



மேலும், விளையாட்டுத் துறையில் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1.5 ½ லட்சம் மதிப்புள்ள கால்பந்து, காலணி, மற்றும் விளையாட்டு சீருடைகள், கைப்பந்து, கேரம் போர்டு போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கும் விடுதிக்கு 1000 லிட்டர் சோலார் வாட்டர் ஹீட்டர், கிரைண்டர், படுக்கும் மெத்தைகள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் 3 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. பரிசுகளை டாடா காபி குரூப் மேலாளர் விவேக் ஐயனார் வழங்கினார்.



இதுகுறித்து டாடா காபி குரூப் மேலாளர் விவேக் ஐயனார் மாணவ-மாணவிகளிடம் கூறுகையில் “பெற்றோர்கள் தேயிலைத் தோட்டத்தில் மிகுந்த சிரமத்தில் பணியாற்றி உங்களைப் படிக்க வைக்கின்றனர். அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தி உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும், என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...