கோவை விமான நிலைய விரிவாக்கம்: தென்னைக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு

கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக தென்னை மரங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.


கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக தென்னை மரங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் உள்ள மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அங்குள்ள தென்னை மரங்களின் வயதுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான தென்னை மரங்களுக்கு ரூ. 27 ஆயிரமும், 10 முதல் 20 ஆண்டுகளான தென்னைக்கு ரூ.30 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு ரூ.29 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட வேண்டிய தென்னைகளுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...