கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக தென்னை மரங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக தென்னை மரங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் உள்ள மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், அங்குள்ள தென்னை மரங்களின் வயதுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான தென்னை மரங்களுக்கு ரூ. 27 ஆயிரமும், 10 முதல் 20 ஆண்டுகளான தென்னைக்கு ரூ.30 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு ரூ.29 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட வேண்டிய தென்னைகளுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.