தண்ணீர் கண்டத்திலிருந்து மீளுமா சென்னை அணி? - மும்பை உயர்நீதிமன்றம் தடை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மைதான பராமரிப்பிற்காக பவானா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மைதான பராமரிப்பிற்காக பவானா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காவிரி பிரச்சனையில் எதிர்ப்பு எழுந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் புனே மைதானத்திற்கு மாற்றப்பட்டது. மைதானத்தைப் பராமரிக்க அதிகளவு தண்ணீர் தேவைப்படும் ஆனால் புனேவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புனே மைதான நிர்வாகிகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, பவானா அணையிலிருந்து மைதான பராமரிப்பிற்கு தண்ணீர் எடுக்க நீதிபதிகள் தடை விதித்தனர். இதனால், சென்னை அணிக்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...