பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டி சர்ச்சையில் சிக்கிய தமிழக ஆளுநர்

சென்னை : ராஜ்பவனில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை : ராஜ்பவனில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

காவிரி விவகாரம், தமிழக பல்கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தவர்களை  நியமித்தது, பாலியல் புகாரில் கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி சிக்கியுள்ளது போன்ற சூழ்நிலைகள் நடுவே இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். 

பதவியேற்ற பின் முதல் முறையாக ஆளுநர் மாளிகையில்  இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேராசிரியரின் பாலியல் புகார் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நிர்மலா தேவி யார் என்றே தனக்கு தெரியாது என்றார். மேலும், தனக்கு கொள்ளுப் பேரன் இருப்பதாக பதிலளித்த அவர், செய்தியாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு திணறினார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் செய்தியாளர் மீண்டும் கேள்வியெழுப்ப, அந்த செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாக தட்டியுள்ளார் ஆளுநர். 



இந்த சூழலில், தனது பேத்தியிடம் நடந்து கொள்வதைப் போல் ஒரு மாநிலத்தின் ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா?  என்ற கேள்வியெழுந்துள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய இந்த சூழலில் ஆளுநர் இது போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழகத்தில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...