கோவை : கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் நீரா மற்றும் கள் இறக்கிய விவசாயிகளின் தோட்டத்தில் தென்னம்மரத்தின் பாளையை வெட்டிய மதுவிலக்கு போலிசாரை கண்டித்து விவசாயிகள் இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கோவை : கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் நீரா மற்றும் கள் இறக்கிய விவசாயிகளின் தோட்டத்தில் தென்னம்மரத்தின் பாளையை வெட்டிய மதுவிலக்கு போலிசாரை கண்டித்து விவசாயிகள் இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் அருணாசலம் (57). இவர் அப்பகுதியில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இதில், அருணாசலம் நீரா மற்றும் கள் இறக்கி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென இவரது தோட்டத்திற்கு வந்த போலிசார் அத்துமீறி தென்னம் பாளையை வெட்டி பானைகளை உடைத்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
அதே போல, செந்தில் ராஜ் என்பவரின் தோட்டத்திலும் விவசாயிகளை விஷக்கள் விற்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் ஒன்றிணைந்த விவசாயிகள், அத்துமீறி மதுவிலக்கு காவல்துறையினர் மரத்தின் பாளையை வெட்டியதை கண்டித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து விவசாயி அர்ஜூனன் கூறியதாவது, எங்கள் தோட்டத்தில் நீரா பாணம் மற்றும் கள் இறக்கினோம்.ஆனால் போலிசார் ஊமத்தம் இலையை கள்ளில் கலந்து விஷக்கள் விற்பதாகச் சொல்லி மிரட்டினார். அதே போல குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டியதாகவும் இதனால் ஒன்றிணைந்து விவசாயிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தை முற்றுகை இட்டுள்ளோம் என்றார்.

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் அருணாசலம் (57). இவர் அப்பகுதியில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இதில், அருணாசலம் நீரா மற்றும் கள் இறக்கி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென இவரது தோட்டத்திற்கு வந்த போலிசார் அத்துமீறி தென்னம் பாளையை வெட்டி பானைகளை உடைத்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
அதே போல, செந்தில் ராஜ் என்பவரின் தோட்டத்திலும் விவசாயிகளை விஷக்கள் விற்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் ஒன்றிணைந்த விவசாயிகள், அத்துமீறி மதுவிலக்கு காவல்துறையினர் மரத்தின் பாளையை வெட்டியதை கண்டித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து விவசாயி அர்ஜூனன் கூறியதாவது, எங்கள் தோட்டத்தில் நீரா பாணம் மற்றும் கள் இறக்கினோம்.ஆனால் போலிசார் ஊமத்தம் இலையை கள்ளில் கலந்து விஷக்கள் விற்பதாகச் சொல்லி மிரட்டினார். அதே போல குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டியதாகவும் இதனால் ஒன்றிணைந்து விவசாயிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தை முற்றுகை இட்டுள்ளோம் என்றார்.