விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியை நிர்மலா தேவி நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலைய போலீசார் நேற்று இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர். 2-வது நாளாக தொடர்ந்த விசாரணை இன்று நிறைவு பெற்றது. இதனையடுத்து, அவர் விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிர்மலா தேவியை வரும் 28-ம் தேதி வரை 12 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.